2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீதமானோரை விட அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours