மாணவர்களது ஆளுமையினை விருத்திசெய்யும் நோக்கில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு அதிபர் கே.தியாகராஜா தலைமையில் 4 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 இதன்போது இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் பாராளுமன்ற அமர்வு போன்று திட்டமிட்டு சபாநாயகர், பிரதமர் அமைச்சுக்கள் தெரிவுசெய்யப்பட்டு குழுவிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் எம்.ஏ.அஸ்கர், ஆசிரியர் ஆலோசகர் எம் எச் கபீர் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.



































Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours