திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி நொச்சிகுளம் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் பிரதான மின் கம்பம் உடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி சாரதியின் தூக்க கலக்கத்தின் காரணமாக மின் கம்பத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது லொறிக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்குரிய பிரதான மின்கம்பம் உடைந்துள்ளதால் மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.<
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours