காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இ;டம்பெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் ஆகும்.இந்நிலையில் விவசாய கால்நடை அபிவிருத்தி கிராமிய பொருளாதார மீன்பிடி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர்அலி அலிசாயி மௌலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,எஸ்.யோகேஸ்வரன், பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவே 449 வேலைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் நிதியினுடாக முன்னேடுக்கப்படுகின்ற வேலை திட்டங்களுக்கான முன்மொழிவுகள் யாவும் இம்மாதத்துடன் முடிவடைந்துள்ளமை தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.அனைத்து பிரதேச செயலகத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டடுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதிகள் மூலமாக வேலைதிட்டங்களை இம்மாதத்துடன் நிறைவுருத்துவதற்கு ஒத்துளைப்பை துரிதமாக வழங்கி சகலரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகொள் விடுத்தினார் .
இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்,மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மற்றும் பிரதேச செயலாளர்கள்,திணைக்களத்தலைவர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours