மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  (திங்கட்கிழமை) மாலைதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பினை சேர்ந்த சின்னத்தம்பி வரதராஜனின் உதவியுடன் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திராய்மடு சுவிஸ் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள 50மாணவர்களுக்கு இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த  நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சுஜிகலா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours