200 வருடம் தொன்மையான புனித செபமாலை மாதாதிருத்தல திருவிழா 4-10-2019 அன்று பி.ப 5.00மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி   

   13-10-2019  அன்று அதிவந்தனைக்குரிய கலாநிதி பொன்னைய்யா   யோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது. 


12-10-2019 அன்று பாதயாத்திரையானது புனித மரியாள் பேராலயத்தில் இருந்து பி.ப 3.00மணிக்கு ஆரம்பமாகி வவுணதீவு ஆயத்தியமலை கரடியனாறு பதுளை வீதி வழியாக திருத்தலத்தை வந்தடையும். சுpறப்பாக 12-10-2019 பி;.ப 5.30 மணிக்கு ஆசிர்வாதத்தினை வாரிவழங்கும் திருச்சுருவபவனி இறைபக்தர்கள் சூழ இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லுமலை புனித  செபமாலை அன்னையின் திருவிழாவை முன்னிட்டு கழிவுகளை சேகரிக்கும் ரப்பர் வாழிகள் ஒரு தொகுதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் மறை மாவட்ட ஆண்டகை கலாநிதி பொன்னைய்யா யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours