(துதி)

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டிலும், புளியந்தீவுதெற்கு சனசமூக நிலையத்தின் ஒத்துழைப்புடனும் நவராத்திரி விழா வழிபாடுகள் இன்றைய தினம்புளியந்தீவு தெற்கு வட்டார வாசிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. 

ரிதம் இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.டில்சாந் தலைமையில்இடம்பெற்ற இப்பூசை வழிபாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், கழகத்தின்ஆலோசகருமான அ.கிருரஜன், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி கே.ஈ.கருணாகரன், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரைமற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள், சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள்,சிறுவர் கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது கழக உறுப்பினர்கள் மற்றும் சிறுவர்களால் பஜனைவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கழக ஆலோசகர் ச.சனத்குமார்அவர்களால் பூசை வழிபாடு மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours