சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதுஎயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக IANS வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ம் திகதி நடக்கவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours