மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடை மழை காரணமாக மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீரால் போக்குவரது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மண்டூர் பிரதேசத்தையும் , வெல்லாவெளி பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாதையில் இரு இடங்களால் வெள்ள நீர் வடிந்தோட தொடங்கியுள்ளது .
குறிப்பாக மட்டு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.கடும் மழை காரணமாக சிறு குளங்கள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் அதிகரித்து செல்கின்றது.
நீர் கூடுதலாக ஊடறுத்து செல்வதனால் அவ் வீதியில் பயணிக்கும் போது மோட்டார் வாகனங்களினுள் நீர் உட்புகுந்து பழுதடைவதை காணமுடிந்தது. வேலைக்கு செல்வோர் உட்பட அனைவரும் நனைந்த ஆடையுடனே செல்வதையும் காண முடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours