(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் 
கறுப்புபட்டி அணிந்து கண்டன எதிர்ப்பு  ஆட்பாட்டம் இன்று திங்கட்கிழமை(4) மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்ளியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.இதன்போது ஊடகவியலாளர்கள் கறுப்புபட்டியணித்து கண்டனத்தையும்,எதிர்ப்பையும் தெரிவித்தார்கள்.கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சுலோக அட்டையை தாங்கியவாறு தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
"காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் முகமட் சஜி மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம்","ஊடகவியளார்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்","தாக்காதே தாக்காதே ஊடகவியலாளர்களை தாக்காதே","அரசே! பாதுகாப்பு அமைச்சே! ஊடகவியலாளரின் சுதந்திரத்தை உறுதிப்படுத்து"தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடு"என தமது கண்டனத்தை தெரிவித்தார்கள்.
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்ற பிராந்திய செய்தியாளரும்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவருமான ஊடகவியலாளர்  ஒருவர் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.இவ்வாறு ஊடகவியலாளர் காடைத்தனமாக தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்கப்பதற்கும்,இவ்வாறு தாக்குதல் நாடாத்தியவரை பொலிசார் கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவயீனர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் முகமட் சஜி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்காக காத்தான்குடியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிர்வு அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குறித்த ஜனாதிபதி வேட்பாளர் நேற்று முன்தினம் தோன்றி உரையாடிய நிலையில் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பில் கூறியே இந்ததாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது அரசாங்க தொலைக்காட்சி செய்திப்பிரிவின் முகாமையாளர் இர்பான் முகமட்டுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து தம்மீது தாக்குதல் நடாத்தியதாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்தார்.
தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்ற ஊடகவியலாளர் சஜியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் சென்று பார்வையிட்டதுடன் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களுக்கு தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours