பிரான்ஸில் இருந்து இரா. தில்லை நாயகம்
                  ஆடற்கலையில் சாதனை  நிகழ்த்தும் தியாகராஜர் கலைக் கல்லூரி இயக்குனரும் நாட்டிய கலைமணியுமான திருமதி.பவானிகுகப்பிரியா அவர்கள் தனது மாணவிகளுடன் இந்தியா நோக்கி  கலைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
                                                                   எதிர் வரும்   12 - 2019 வியாழக் கிழமை  சிவகாசியில் நடைபெறும் சர்வதேச முத்தமிழ் விழாவிலும் 14ம்,15ம் திகதிகளில் மதுரையில் நடைபெறும் தமிழிசை மகாநாட்டடிலும் கலந்து கொண்டு ஆடற்கலை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இவ் விழாக்களில் திருகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி’ என்னும் நாட்டிய நாடகம் அரங்கேறவுள்ளது.திருகோணமலையின் அழகை வெளிப்படுத்தும்  இந்நாட்டிய நாடகம் ஒரு செடில் காவடியுடன் முடிவடைகிறதுஇலங்கையிலுள்ளமுருகன் கோவில்களின் சிறப்புகளை இக்காவடியின் பாடலில் காணக் கூடியதாகவுள்ளதுதிருகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தின் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், பக்குவ ஜீவாத்மா ஞானத்தின் உதவியுடன் பரமாத்மாவை சென்றடைதல். இங்கு ஜீவாத்மாவாக ஷண்முகவல்லியும் ஞானத்தின் அடையாளமாக குறவஞ்சியும், இறை பரமாத்மாவாக திருகோணமலை வில்லூன்றிக் கந்தகந்தனும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந் நாட்டிய நாடகத்தை எழுதியவர் இலங்கையின் புகழ்பூத்த மறைந்த வீரமணி ஐயர் என்பது சிறப்பான விடயமாகும். மேலும் இந்நாட்டிய நாடகத்தை இறுதியில் வீரமணி ஐயரின் அனுமதியோடு திருகோணமலை தென்கையிலை ஆதீனக் குருவான அகத்தியர் அடிகளார் சில விடயங் கiளை இணைத்து மெருகூட்டி உதவியுள்ளார் என்பதும் இன்னுமொரு சிறப்பாகும். அத்துடன் இந் நாட்டிய நாடகத்தின் இறுதியில் அலங்கரிக்கும் செடில் காவடியை நாட்டியக்கலைமணி திருமதி.பாவானி குகப்பிரியா அவர்களே உயர் இறை சிந்தையுடன் தயாரித்துள்ளார் என்பதும் இன்னுமொரு பெருமைக்குரிய விடயமாகும்.
 உலக இந்து மாகாநாட்டிலும், முருக பக்தி மகாநாட்டிலும் பங்குபற்றி, மேலும் இந்த செடில் காவடி தீவின் அனைத்துப் பதக்கங்களையும் வென்றது நாட்டிய கலைமணி திருமதி பவானி குகப்பிரியாவுக்கும் அவரது மாணவிகளுக்கும் கிடைத்த பெறுபேறாகவே கருதப்படுகிறது.  
காவடி 
————
தமிழ் கிராமிய கூத்தின் வழி நெடுகிலும் வரும் சுவடாய் அமைகிறது காவடி ஆட்டம்ஆட்டத்தின் ஓர் அங்கமாய்பக்தியின் ஓர்உணர்ச்சியின் உச்சியில் விழி வழியே கயல்நீரின் சூட்டினை உணரச் செய்திடும் கூத்தின் ஒரு பகுதியாம் இக்காவடி.முருகனிடமே அடி வைத்து சென்றிடுவதாய் எண்ணும் சாரமாய் காவடி தூக்குகின்றனர் நம்மவர்கள்கா அடி என்பதுகாவாகச்சுமக்கப்படும்” முருகப்பெருமானின் திருவடி, “காவடி” எனும் சொல் காவுதடி என்பதின் மருவிச்சொல் என்பதும் ஓர்சாரார் வாதம்.
தவில்லய பிராணனாய்நாதஸ்வரம் எழுப்பும்ஏழு ஸ்வர அடி நாதமும் “சிந்து” வடிவில் இசையை பிறப்பிக்க காவடி ஆடுவதுமரபுஅலகு எனும் வேல் ஊசியை குத்தியபடியோபறவை போல் காவடியை படுத்த வண்ணம் “பறவை காவடி” ஆகவோதானேகாவுதடி சுமையாய் மாறும்தூக்குக்காவடி” ஆகவோகயிறுகளை இழுத்த வண்ணம் “செடில்” குத்திய வண்ணமோ தம் உடல்வலிமையையும் மன ஓர்மத்தையும் வினாக்குட்படுத்திகாவடி ஆடுவர்.
உணர்வுகள் சில்லிடும் முருகன் திருவிழாக்கள் மரபைக் கைவிடாதுநாம் நம்  சிறுபராயத்தில் மண்டூர் முருகன் விழாவிலும்,நல்லூர் அலங்காரக்கந்தன் பின்னே பறவைபோல் அலைபோல் காவடி ஆட்டத்தினை மறக்க முடியாமல்..., மாணிக்க கங்கைஓரம் கதிர்காமக் கந்தன் அவனும்அன்ன தானக்கந்தன் அவன் செல்வச்சந்நிதியிலும்மாவை கந்தசுவாமிக் கோயிலிலும்,திருகோணமலை வில்லூன்றிக் கந்தன் அவனையும்இலங்கை முழுதும் கந்தன் குடியிருக்கும் தலத்தினை மறவாமல்எண்ணியபடி அவற்றை நோக்கிய எம் பக்தி பாவனையை சலங்கை கட்டி காவடி தூக்கி ஆட்டமதனை அரங்கேற்றுகிறோம்.குறவஞ்சி வள்ளிக்கு குறிகூறி வள்ளியும் முருகனிடம் இணைந்த பின்...!
நடன ஆசிரியர் நாட்டிய கலைமணி திருமதி பவானி குகப்பிரியா :
பாரதநாட்டியத்தை கற்பிப்பதற்கான மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் அர்ப்பணிப்புள்ள குருவாக நாட்டிய கலைமணி திருமதிபவானி குகபிரியா தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்அவரது அதியுயர் சிறந்த  நடனங்கள்  பல மட்டங்களில்பாராட்டப்பட்டுள்ளனபார்வையாளர்களிட மிருந்து உண்மையான பாராட்டையும் உற்சாகத்தையும் தூண்டிய ஊக்கமளிக்கும்மற்றும் தனித்துவமான படைப்புகளாக அவரது ஆக்கங்கள் விரிகின்றன.
 அவரது நடனக் கற்பித்தல் பயணம் திருகோணமலைசென்னை மற்றும் இப்போது கொழும்பு வழியாக சென்றடைந்துள்ளதுஅங்கு அவர் ஒரு பிரபலமான நடனப் பள்ளியான தியாகராஜர் கலைகோவில் ஒன்றை நிறுவி,  சமீபத்திய காலங்களில் 1500 க்கும்மேற்பட்ட திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.
அவரது நாட்டிய நாடகம் திருகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி’ சர்வதேச அரங்கில் “உலக இந்து மாநாடு -2003” ல் அரங்கேற்றப்பட்டு அன்றைய சிறந்த நிகழ்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதுஇத் தெரிவின் மூலம் "தேசபந்துவிருதைப் பெற்றமுதல் தமிழ்பரதநாட்டிய ஆசிரியராக நாட்டிய கலைமணி   திருமதி பவானி குகபிரியா திகழ்கின்றார். "தேசபந்துவிருது ஸ்ரீலங்காவின் மிக உயர்ந்த  விருதுகளில் ஒன்றாகும்.  
அதைத் தொடர்ந்து பல மதிப்புமிக்க விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொண்டார்.  2019 ஆம் ஆண்டில் இலங்கை இந்து கலாச்சார அமைச்சகத்தால் கலைச் சுடர் விருதும், திருகோணமலை  தென் கைலாய ஆதீனத்தால் “கலைச் சரஸ்வதி  விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து மெற்கோள்ளும் இக்கலைப் பயணமானது, ஒட்டு மொத்தத்தில் தமிழினத்திற்கும், தமிழர்களின்ஆடற்கலைக்கும்  இலங்கை நாட்டிற்கும் பெரும் புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours