குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதுபோன்று கிரான் ,வாழைச்சேனை ,வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமைத்த உணவுகள்,குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்ற வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின்; பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ் சியாத் குறிப்பிட்டுள்ளார்.
கிரான் ,ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளதாகவும் சில தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் ஒடுவதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இது குறித்த கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் மக்களின் பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாக அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவிழ்ச்சியாக 16.1 மில்லி மிற்றர் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று 2ம் திகதி முதல் அடுத்த 24மணித்தியாளத்தில் 100மில்லி மிற்றர் முதல் 150மில்லி மிற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours