மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிண்ணயடி இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை மட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சிறு உதவிகளை வழங்கினர்,

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரச்சபை உறுப்பினர் பூபால்ராஜ் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்்டதுடன் சித்தாண்டி பகுதிகளையும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours