(சா.நடனசபேசன்)

வேள்விசன் நிறுவனத்தின் அனுசரணையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு அத்தியாவசிய கற்றல் தேர்ச்சி தொடர்பான செயலமர்வு இன்று 23 ஆம் திகதி கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் செல்வி வீ.நிதர்சினி அவர்களது ஒழுங்கமைப்பிலும் வலயக்கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.எஸ்.நஜீம் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
கல்குடா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன் கருத்தரங்கிற்கு வளவாளராக கலந்துகொண்டார்.
இதில் சம்மாந்துறை கல்விவலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான ஏ.அஸீஸ்,கே.அற்புதராசா,எம்.எஸ்,ஏ.அஸீஸ் மற்றும் வேள்விஷன் நிறுவனத்தின் கல்வி திட்ட இணைப்பாளர் ஏ. தனுராஜ் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours