காரைதீவு  நிருபர் சகா

பிரித்தானியா   'அன்னை சிவகாமி அறக்கட்டளை'  அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் அட்டப்பள்ளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஸ்குமாரின் ஏற்பாட்டில் இன்று.-06- திங்கட்கிழமை அட்டப்பள்ளம் கிராம மக்களுக்கு 200உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தனது அன்னையின் பேரால் கடந்த 10வருடங்களாக சமுகசேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின்நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி அட்டப்பள்ள தமிழ்முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

அட்டப்பள்ளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர் த.கோபாலன் எஸ்.மோகன் மற்றும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் கிராமசேவையாளர் தொழினுட்பஉத்தியோகத்தர். உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours