இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் மேலும் 3 கொரானா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் 44 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours