கொரோனா வைரஸ் பாதிப்பில்  வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு   வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாகொடுப்பனவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.இப்பணியில் உதவிபிரதேச செயலாளர் திருமதி சுபா,சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கலைச்செல்விவாமதேவன்உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாகொடுப்பனவு  வழங்கும் மேற்பார்வை கடமையில்  ஈடுபட்டனர் .

இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெரும் குடும்பங்கள் 7640 க்கும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள்     2250க் கும் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பம்  268 க்கும் மேல்முறையீடு செய்த   48குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா 1 0 ஆயிரத்தி 2 06 குடும்பங்களுக்கு வழங்கப் படவுள்ளது .

இந்தபணிகளில்உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் ,முகாமத்துவபணிப்பாளர் கே.தங்கதுரை சமுர்த்தி புது மண்டபதடி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தில்லையம்மா , கரவெட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அசோக்குமார் பிரியதர்சினி மகிழவட்டவான் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புவனேஸ்வரி ஜெயசிங்கம்,ஆயித்தியமலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கிரிஸ்ணவேணிகநேசனாதன்ன்  ஆகியோரும் ஈடுபட்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours