இலங்கை நாட்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞரும்,பேராதனை பல்கலைக்கழக முன்னாள் அரபுத்துறை பேராசிரியரும், பேருவளை 'ஜாமிஆ நழீமியாவின்' உருவாக்கத்திற்காக மதிப்புக்குரிய பெருவள்ளல் மர்ஹும் நழீம் உறாஜியார் அவர்களோடு அயராதுழைத்து, கடந்த சுமார் 50 வருடங்களாக அதன் பணிப்பாளராகவும் பணியாற்றிய கலாநிதி. எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் தனது 80 வது வயதில் இன்று காலை கொழும்பில் காலமானார்.
மிகசிறந்த பேச்சாளன் , அழகாக தமிழில் எழுதக்கூடியவர் , தமிழ் , சிங்கள சகோதர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உள்ள பெரும் தகை. , இன, மத , ,மொழி பேதம் ,பிரதேசவாதம்கடந்து மனிதனாக வாழ்ந்த ஒரு புனிதர் இவர்..

Post A Comment:
0 comments so far,add yours