நூருல் ஹுதா உமர்
நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தேசிய காங்கிரஸின் பொதுத்தேர்தல் வேட்பாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம்.சலீம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் , கொரோனா பரவல் நிலையால் வழமைக்கு மாறாக வீட்டிலிருந்தே அமல்களைச் செய்து புனித ரமழானை அமல்களால் அலங்கரித்து பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் உங்கள் சகோதரனாக, நண்பனாக எனது உளம்கனிந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப சட்டதிட்டங்களை மதித்து பெருநாளை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஈத் முபாறக் என தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours