அம்பாரை மாவட்ட விவசாய திணைக்களத்தின் (விரிவாக்கல்இடைமாகாணம்) சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட துரைவந்தியமேட்டுக்கிராமத்தில் சௌபாக்கியா உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உற்பத்திசெய்யப்பட்ட நிலக்கடலையினை அறுவடைசெய்யும் நிகழ்வு அண்மையில் சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல்நிலைய பொறுப்பதிகாரி தி.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறந்த விவசாய நடைமுறை அலகின்கீழ் விவசாயப் பண்ணைக்குரிய பொருட்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட விவசாயத்திணைக்களத்தின் பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார் விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.எம்.ஜெமீல் தொழில்நுட்ப உதவியாளர் எல்.தீபாலினி உட்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours