காரைதீவு  நிருபர் சகா

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளராக எம்.எஸ்.சஹதுல் நஜீம் மீண்டும் (17)திங்கட்கிழமை கடமையேற்றுள்ளார்.

  திங்கள் கிழமை(17) முதல் செயற்படும்படியாக சம்மாந்துறை  வலயக்கல்விப்பணிப்பாளராக  மீண்டும் எம்.எஸ்.சஹதுல் நஜீம்   மீண்டும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டாவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

கிழக்க மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில்   கல்வி நிர்வாகசேவை வகுப்பு 1ஐ சேர்ந்தவரை நியமிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டது. இந்நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்ற எம்.எஸ்.சஹதுல்நஜீம் மீண்டும் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் நஜீம் ஏலவே கல்முனைவலயத்தில்  பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் சம்மாந்துறை  கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் இவரது காலததில் சம்மாந்துறை வலயம் பலசாதனைகளை செய்து பாராட்டுக்களைப்பெற்றிருந்தமையு ம்   குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours