துதி
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு இணைப்பாளருக்கு பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்நிகழ்வினை ஒழுங்கமைப்பு செய்யும் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. அதேவகையில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் த.சுரேஸ் அவர்களுக்கும் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours