எருவில் கல்வி சமூக அபிவிருத்தி  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம் முறை சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வரலாறுப்பாடத்திற்கான  இலவச கல்விக் கருத்தரங்கு 16 ஆம் திகதி பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட  கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் பிரதி அதிபரும் அமைப்பின் செயலாளருமான ஆர்.ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது ..

இக்கருத்தரங்கிற்கான நிதி அனுசரணையினை சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இக்கருத்தரங்கு இடம்பெற்றது. .இக்கருத்தரங்கில் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தியாலயம் மகிழூர் சரஸ்வதிவித்தியாலயம் மகிழூர் முனை சக்திவித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கான வளவாளர்களாக ஆசிரியர்களான ,க.மோகனதாஸ் யாதவரூபன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் யோ.ஜெகதீஸ்வரன் அமைப்பின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours