இ.சுதாகரன்


உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மூன்றாவது அகவையினை முன்னிட்டு கட்டாரில் உதைபந்தாட்டப் போட்டி

உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மூன்றாவது அகவையினை முன்னிட்டு கட்டார் நாட்டில் தொழில் புரியும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின்  ஸ்தாபகர் தலைமையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மட்டு மாவட்ட கல்முந்தன்வெளி விளையாட்டுக்கழகமானது சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை மண்டூர் கண்ணகி விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தினை அம்பாரை மாவட்டத்தின் சொறிக்கல்முனை விளையாட்டுக் கழகமும் தட்டிக்கொண்டன.

உதை பந்தாட்டப் போட்டியில் சுமார் பத்து அணிகள் பங்குபற்றியதுடன் போட்டியில் திறமையினை வெளிக்காட்டிய அணிகள் மற்றும் தனித்திறமையினை வெளிக்காட்டிய வீரர்களுக்கான நினைவுச் சின்னங்கள் உணர்வுள்ள அமைப்பின் பிரதி நிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours