(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணணி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 43 சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணணி மயப்படுத்தி துரித ஒன்லைன் சேவைகளை மக்களுக்கு வழங்கும் விஷேட வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 43 சமுர்த்தி வங்கிகளுள், 26 வங்கிகள் கரையோரப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் தற்போது 20 சமுர்த்தி வங்கிகளின் சேவைகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக வளாகத்தில் அமையப் பெற்றுள்ள சமுர்த்தி வங்கியானது அம்பாறை மாவட்டத்தில் ஒன்லைன் மூலமாக மக்களுக்கு சேவை வழங்கும் வண்ணம் கணணி மயப்படுத்தப்பட்டுள்ள இருபதாவது வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
கணணி மயப்படுத்தப்பட்ட இச்சேவை மூலம் சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் நன்மை பெறும் பொதுமக்கள் சிறந்த வினைத்திறன் மிக்க துரிதமானதுமான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






Post A Comment:
0 comments so far,add yours