நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகல, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து கிராம சேவை பிரிவுகள் உடன் அமுலக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றது.

மொனராகல மாவட்டத்தின் வெல்லவாய நகரசபை எல்லைப் பகுதி, வெஹரயாய கொத்தம்கஹாபொக்க, புத்தல ரஹதன்கம ஆகிய பகுதிகள் முடக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் உஹன குமாரிகம மற்றும் மாத்தளை மாவட்டத்தின் அலுகொல்ல ஆகிய கிராம சேவை பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours