மட்டக்களப்பு நகர்ப்பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து வீதிகளில் முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்களை வழிமறித்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் வங்கி ஊழியர்கள், பொலிஸார் உட்பட 5 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 3 வது அலையாக அதிகரித்துள்ள கோவிட் தொற்றினையடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் நகர்ப்பகுதியான அரசடி வீதி சுற்று வட்டத்திற்கு அருகில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், பொலிஸாருக்கும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டு பரிசோதனைகள் இடம்பெற்றது.

Post A Comment:
0 comments so far,add yours