முன்னாள் பிரதேச செயலாளர் கே. லவநாதன் 08. 04. 2021நேற்ற மாரடைப்பு காரணமாக மரணமானார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் இறுதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி இருந்தார். கடந்த காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலராகவும் நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.
மட்டக்களப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

Post A Comment:
0 comments so far,add yours