மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில் 41 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 27 பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 3 பேரும், ஏறாவூர் - காத்தான்குடி சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவரும், வாழைச்சேனை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 5 பேரும், களுவாஞ்சி குடி சுகாதார பிரிவில் 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 66 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours