இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours