முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொத்மலை பிரதேச நிலப்பிரச்சினைகள் உதவி ஆணையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் முகப்புத்தகத்தில் காடழிப்பு தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் காணிகளை சுத்தம் செய்யும் புகைப்படங்களை எடுத்து இலங்கையின் பிரசித்த பெற்ற காடுகளை அழிப்பது போன்று பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours