(க.விஜயரெத்தினம்)


ஐநா ஒரு கையாலாகாத நைனாவாகும்.அந்த நைனா அமெரிக்கா போன்ற பணம்படைத்தவனுக்குத்தான் நல்ல நைனாவாக இருப்பதை தவிர எந்தவொரு பாதிக்கப்பட்டவர்களுக்கும்,சிறுபான்மையினத்துக்கும் நல்ல நைனாவாக இருந்து தீர்வு காணமுடியவில்லை என
தேசிய மக்கள் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் எனத்தெரிவித்தார்.

தேசிய மக்கள் சபையின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை(18)காலை 11.45மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றபோதே தேசிய மக்கள் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இவ்வாறு  தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் வியாதியாக கொவிட்-19 வைரஸானது உலகநாடுகளின் பொருளாதார நிலைமையை கூறுபோட்டு அழித்துக்கொண்டு பொருளாதாரத்தை மலினப்படுத்திக்கொண்டு உலகமக்கள் கஸ்டப்படும் இன்றைய நிலையில் இஸ்ரேல் திட்டமிட்டு பாலஸ்தீனம்மீது ஒரு இரக்கமற்ற,ஒரு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

கமாஸ் இயக்கம் இஸ்ரேலை போய் பின்னால் சுரண்டுவதும்,பின்னர் இஸ்ரேல் அதற்கு அடிப்பதும் அதனால் தாக்கப்பட்ட பாலஸ்தீனம் நீதி,நியாயம் கேட்டு ஐ.நா செல்வதும்,இன்று நேற்று மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.இதற்கு ஐக்கியநாடுகள் சபை சரியான ஒரு தீர்வை இதுவரையும் முன்வைக்கவில்லை.

கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் தனது முழுமூச்சுடன் தமது முழுமையான ஆதரவையும் கொண்டு இந்தப்பிரச்சனையை தீர்க்கவேண்டுமென கரிசனை காட்டினார்.அந்தநேரத்தில் இதே கமாஸ் இயக்கமானது ஒரு பாலஸ்தீன குடிமகன் யசீர் அரபாத்துக்கு பெரும் தடையாக இருந்தது.இவ்விடயமாக யசீர் அரபாத் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.இந்த இயக்கம் போராட்ட காலத்திலும் நடாத்திய வேதனையை காட்டிலும் இப்போது சமாதான ஒப்பந்த காலத்திலும் மிகுந்த வேதனையாக இருக்கின்றது.எல்லாவற்றையும் கமாஸ் இயக்கம் குழப்பிக்கொண்டிக்கின்றது.இந்த இயக்கத்தை காரணம் காட்டிக் கொண்டிருக்கின்றது.4பேர் இஸ்ரேலியர் இறந்ததைக் காட்டி முழு இஸ்ரேலையும் அழிக்க முற்படுகின்றார்கள்.இதுவரையும் இஸ்ரேலில் 266பேர் இறந்துள்ளார்கள்.இஸ்ரேலில் பத்திரிகையாளர்களின் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் அழிந்து சேதமடைந்துள்ளது.அக்கட்டிடத்தில் செத்துப்போனவர்கள் யார்,யாரென்று இன்னும் அறிய முடியாமல் இருக்கின்றது.

ஐ.நா,ஐ.நா எனச் சொல்லும் எமது இனங்களுக்கும், ஐநாவில் தீர்ப்போம் எனச் சொல்லும் இனங்களுக்கும்,நாம் திட்டமிட்டு கூறுகின்றோம் என்னவென்றால் ஐநா ஒரு கையாலாகாத நைனாவாகும்.அந்த நைனா அமெரிக்கா போன்ற பணம்படைத்தவனுக்குத்தான் நல்ல நைனாவாக இருப்பதை தவிர எந்தவொரு பாதிக்கப்பட்டவர்களுக்கும்,சிறுபான்மையினத்துக்கும் நல்ல நைனாவாக இருந்து தீர்வு காணமுடியவில்லை எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours