இலங்கையில் கோவிட் தொடர்பான 44 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1132 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஒரே நாளில் கோவிட் தொற்றினால் ஏற்பட்ட அதிகூடிய மரணங்கள் இதுவாகும்.

71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 பேரும், 61 - 70 வயதுக்கு உட்பட்ட 11 பேரும், 51 - 60 வயதுக்கு உட்பட்ட 7 பேரும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரும், 21 - 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours