செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளரரும், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகன் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து பகிர்வு செய்தவர்களின் பதிவுகள் என அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours