கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கடமையாற்றும் மூன்று பேருக்கு கோவிட் தொற்றியுள்ளதால், நேற்று முதல் ஆலயம் மூடப்பட்டுள்ளது.

பக்தர்கள் எவரும் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஆலய பூசகர் மாத்திரம் கந்தனுக்குப் பூஜை செய்து வருவதாக ஆலயத்தின் பிரதான பூசகர் சோமபால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கோவிட் நிலைமை கட்டுப்படுத்தப்படும் வரை பக்தர்கள் ஆலய பூமிக்கு வருவதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours