(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை பிரிவாக இன்று 09.06.2021 ஆந் திகதி புதன்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் மற்றும்
நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டோர் அடங்கிய வைத்தியர்களால்   குறித்த சிகிச்சைப் பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


இங்கு நூறு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடியதாக இந்த சிகிச்சைப்பிரிவு அமைந்துள்ளதெனவும், இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் திறக்கப்பட்ட கொவிட் சிகிச்சை நிலையங்களில் 667 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் 667 கட்டில்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours