வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் தொட்பான அனுசரணைக்கூட்டம் இன்று(12) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு நடைபெறும்.
திருக்கோவில் பிரதேசசெயாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேசசெயலகத்தில் இக்கூட்டம்நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் கொவிட் சுகாதார வழிமுறை தீர்மானங்கள் எடுக்கப்படவிருக்கின்றன.அனுசரணை
இந்தவருடத்திற்கான ஆடி அமாவாசை உற்சவம் ஜூலை மாதம் 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.மறுநாள் பூங்காவனத்திருவிழா தொடர்நது மறுநாள் வயிரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநதாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிபிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours