அரியாலை ஸ்ரீ வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் ஊடாக இந்த அற பணியை சுவிற்சலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற புலம்பெயர் வாழ் இத்தி மரத்தாள் புத்திரர்கள் திருப்பணி சபை முன்னெடுத்தது.
ஆலய நிர்வாகத்தின் சார்பாக தலைவர் மு. ஜெஸ்லிபாலா, செயலாளர் க. சந்திரராஜா, உப செயலாளர் கா. ஜெயராசாசிங்கம் மற்றும் போசகர் மா. மனோகரநாதன் ஆகியோரும், திருப்பணிச் சபை சார்பாக கனகசபை கோடீஸ்வரன், வி. கே. குமணன், நடேசபிள்ளை பிரதீபன் ஆகியோரும் வீடு வீடாக சென்று உணவுப் பொதிகளை கையளித்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours