(அஸ்லம் எஸ்.மௌலானா)


வெளிநாட்டு பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் செல்லுபடித்தன்மை பற்றி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்காது என தகவலறியும் சட்டத்திற்கமைய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பை தொடர விரும்பும் இலங்கை மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன்போது சர்வதேச மற்றும் பொதுநலவாய மட்டத்தில் செயற்படும் பல்கலைக் கழகங்களின் விபரங்கள் உறுதிப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும் அப்பல்கலைங்களினால் வழங்கப்படும் படங்களின் செல்லுபடித்தன்மை பற்றிய உறுதிப்படுத்தல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களால் வழங்கப்படும் சகல பட்டங்களும் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்பதை ஊகிக்க முடிகிறது என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours