(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்க சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று சூம் (ZOOM) தொழினுட்பத்தின் ஊடாக நடைபெற்றது

இந்த பன்னாட்டு கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக தமிழ் பேசும் சமூகங்களிடையே கலை இலக்கியப் பண்பாட்டுப் பெறுமானங்கள் எனும் விடையத்தினை ஆய்விற்கு உட்படுத்துவதற்காக மாவட்டத்தின் முக்கிய எழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் துறைசார் நிபுனர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டனர்.

இக் கருத்தரங்கினை மாவட்ட செயலகத்தின் மாவட்ட கலாசர உத்தியேகத்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் அவரின் தலைமையுரையுடன் இன்று 10.00 மணிக்கு நடைபெற்றது இக்கருத்தரங்கில் வரவேற்ப்பு உரையினை உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் ஆற்றியிருந்தார்.

கருத்தரங்கில் பேராசிரியர்களான சி.மௌனகுரு வ.மகேஸ்வரன் ரமீஸ் அப்துல்லா நா.சுலோசனா ஆகியோருடன் முனைவர்களான முருகு தயாநிதி ர.சுரே~; வானதி பகீரதன் கலா சந்திரமோகன் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோருடன் மாவட்ட எழுத்தாளர்கள் என பலரும் கலந்து தங்களின் கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours