(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வு நேற்று சுகாதாரமுறைப்படி சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார். மாநகரசபையின் ஒன்றரைகோடி ருபா செலவிலானஇவ்வீதியமைப்புபணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
களுதாவளை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு கார்ப்பட் வீதியாகக்கருதப்படும் இப்பணி சமயஆசாரங்களுடன் விசேடபூஜையுடன் ஆரம்பமாகியது.
கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் இத்தகைய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து சமுகஆர்வலர்கள் மேயர் பிரகாஷிற்கு பாராட்டுத்தெரிவித்துவருகின் றனர்.



Post A Comment:
0 comments so far,add yours