நவராத்திரி,துர்க்கை,விஜயதசமி,சரஸ்வதி,விஷேட பூசை

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) :- 
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றுவரும் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தின் வடிவமான துர்க்கைக்கும், அடுத்துவரும் மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்கள் கல்வியின் வடிவமான சரஸ்வதிக்கும் விழா எடுத்து விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும்.

ஒன்பது நாள் நிறைவுபெற்று பத்தாம் நாள் விஜயதசமியாகும், அன்றைய தினம் ஏடு தொடங்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் இடம்பெற்ற பூசை நிகழ்வில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு பொங்கலிட்டு, பிரசாதம் படைத்து விஷேட பூசை இடம்பெற்றது.







Share To:

pub.ruck

Post A Comment:

0 comments so far,add yours