(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணம் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சம் பெறுமதியான ஒட்ஸிஜன் செறிவாக்கி மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிட்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண தொகுதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 231ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிறிகேடியர் கேணல் டிலூப பண்டார தலைமையில் கையளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லடி 231 வது இராணுவ படையணியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours