(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டமாக தயாரிப்பதற்கான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறும் கலந்துரையாடல் ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில்  (24) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷhட் தலைமையில்  நடைபெற்ற கலந்துரையாடலில் துறைசார் நிபுணர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக  புலனாய்வு உத்தியோகத்தர். எம்.எம்.எம்.றிஸ்வி  சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல், துறைசார் நிபுணர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours