மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்றிரவு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக முறையில் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களுதாவளை பிரதான வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான மணலசேகரம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி பக்கம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியைக் குறுக்கீடு செய்த பெண் மீது மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours