(சுமன்)
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகள் இவ்வருடம் கைச்சாத்திடப்பட வேண்டியது. ஆனால் நிதி அமைச்சினால் பதினொரு மாதங்களாகியும் இன்னும் அது கைச்சாத்திடப்படவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடியாக நிதி அமைச்சினால் அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதைப் பிரதானமாக வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours