நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

எமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்திற்காக முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதை எல்லோரும்  சிந்திக்க வேண்டியது மிகவும் அவசிமானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்

கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வின்னர்ஸ் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் (Badminton Indoor Court) வின்னர்ஸ் ( Winners ) பூப்பந்தாட்ட  அரங்கின் ஸ்தாபகர் ஆசிரியர் யூ. எல். எம்.ஹிலாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கலந்து கொண்டு பூப்பந்தாட்ட உள்ளக அரங்கினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் உட்பட பிராந்திய விளையாட்டு கழகங்களின் பிரதானிகளும் வீரர்களும் கலந்து கொண்டனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours