தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இறக்காமம் , மாணிக்கமடு கிராமத்தில் வசதி குறைந்த ஒரு தொகுதி மக்களுக்கு, பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி தொடக்கம் சட்டி பானை வரையிலான பொங்கல்பொதிகள் (13) இலவசமாக வழங்கப்பட்டன.
இதனை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரும், சமூக சேவையாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் வழங்கி வருகிறார்.
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு தங்களுடைய குடும்ப நினைவு தினத்தையும் பொங்கலையும் சிறப்பிக்கும் முகமாகவும் 100 குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுடைய குடும்பம் சார் உறவுகள் வழங்கி இருக்கின்றார்கள்.
காலமறிந்து செய்த உதவிக்காக குறித்த அம்பாறை மாவட்ட மக்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours