(வி.ரி.சகாதேவராஜா)


தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டத்திருவிழா திருக்கோவில் மண்ணில் நான்காவது முறையாக இடம்பெறவுள்ளது.

திருக்கோவில் பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு  நான்காவது முறையாக இடபெறவுள்ள பட்டம் விடும் திருவிழா, எதிர் வரும் 14ஆம்  திகதி பிற்பகல் 2.00மணி முதல் மாலை 6.30 மணி வரை திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.


ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் .சிறந்த தயாரிப்பு பட்டங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் உண்டு .மேலும் சிறந்த புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு பரிசு மழையும் உள்ளது. மேலும் இவ் புகைப்படங்களை Tkkitefestivel2022 எனும் டெக்குடன் முகநூலில் தரவேற்றம் செய்வதன் முலம் கிடைக்கப்படும் விருப்புகளுக்கு அடிப்படையில் இவ் பரிசுகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

'ரேடியோ பழசு' இசைக்குழுவின் இன்னிசை மழையும் உள்ளது..

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours