நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை நாபீர்  பௌண்டேஷனினால் மருதமுனை அல் -மினன் வித்தியாலயம், மருதமுனை அல் மதீனா வித்தியாலயம் மற்றும் மருதமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் சிபான் பஹுறுத்தீன் இன் வேண்டுகோளின் பேரில் நாபீர் பௌண்டேசன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான இந்த கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் சிபான் பஹுறுத்தீன், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours